Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா அண்டை நாடுகளுடனான உறவை பிரதமர் அழித்து விட்டார் | ராகுல் காந்தி

அண்டை நாடுகளுடனான உறவை பிரதமர் அழித்து விட்டார் | ராகுல் காந்தி

1 minutes read

அண்டை நாடுகளுடனான உறவை பிரதமர் நரேந்திர மோடி அழித்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ளாமல் இருப்பது ஆபத்தானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல், ‘பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி வளர்த்து, கட்டமைத்த அண்டை நாடுகளுடனான சமூக நட்புறவை பிரமதர் மோடி அழித்துவிட்டார்.

அண்டை நாடுகளுடன் நாம் வாழும்போது, நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நண்பர்கள் இல்லாமல் இருப்பது ஆபத்து’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பங்களாதேஷம், சீனாவுடன் நெருக்கமான நட்புறவை ஏற்படுத்துவதாக வெளியான ஆங்கில செய்தி ஒன்றை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More