இந்திய இசை உலகம், அதன் மிக மெல்லிய குரல்களில் ஒன்றை இழந்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் காலமாகியுள்ள நிலையில், அவரது மறைவுக்கு திரைத் துறையினர், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்.பி.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ருவிற்றர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்திய இசை உலகம், அதன் மிக மெல்லிய குரல்களில் ஒன்றை இழந்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.