மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் போலீசார் மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் நேற்றைய தினம் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் காம்தார் நகர் இல்லத்தில் இருந்து தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் வைக்கப்பட்டு அஞ்சலி செய்யப்பட்டது.
அதன் படி 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடலுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர்.
ஆயுதப்படை உதவி ஆணையர் திருவேங்கடம் தலைமையில் 72 முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்ட உடலிற்கு பொலிசார் மட்டும் பாதுகாப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொடர்பில் சில கவி வரிகள்
தேன் குரலால்
சுக ராகம் தந்த இசையமுதே..
ஓய்வின்றி பாடினாய்..
இனி ஓய்வெடு…
உன் பாட்டு எங்களுக்கு தாலாட்டு..
இனி…
உன் பாட்டு உனக்கே தாலாட்டு..
உன் பாடல் கேட்டே…
கவலைகளை காற்றில் பறக்கவிட்டோம் .. இனியும் உன் பாட்டு கேட்டே
காலம் கடந்து செல்வோம்..
நீ நிம்மதியாய் கண்ணுறங்கு
கலைத்தாயின் திருமகனே…
எஸ்.பி.பியின் நினைவு இல்லம்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நினைவு இல்லம் கட்டப்படும் என்று அவரது மகன் சரண் உறுதியாக தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதன் பின் அதில் இருந்து மீண்டு, மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த வெள்ளிக் கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரின் உடல், திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம்-செங்குன்றம் சாலையில் உள்ள பண்ணை இல்லத்தில், முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.