நடிகரும் தேமுதிக பொதுச்செயலாளாருமான விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனாதொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
விஜயகாந்துக்கு சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், பூரண உடல்நலத்துடன் உள்ள விஜயகாந்த், இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்ப உள்ளார். அடுத்த வாரத்தில் இருந்து கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் விஜயகாந்த் இணையத்தில் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தேமுதிக பொருளாளரும், அவரது மனைவுயுமான பிரேமலதா விஜயகாந்த் தகவல் தெரிவித்திருந்தார்.
பிரேமலதா , நடிகர் விஜயகாந்த்
இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.