Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா வளர்பிறையில் கறை எதற்கு? விஜய் சேதுபதிக்கு அறிவுரை கூறிய கவிஞர் வைரமுத்து

வளர்பிறையில் கறை எதற்கு? விஜய் சேதுபதிக்கு அறிவுரை கூறிய கவிஞர் வைரமுத்து

2 minutes read
இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்..” விஜய் சேதுபதிக்கு  வைரமுத்து கோரிக்கை | Vijay Sethupathi should avoid starring in the biopic  of Muttiah Muralitharan ...

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் அவரின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு கவிஞர் வைரமுத்து அறிவுரை வழங்கியுள்ளார்.

பிரபல நடிகர் விஜய் சேதுபதி இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார்.

இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும், விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, கலையாளர் விஜய் சேதுபதிக்கு. சில நேரங்களில் செய்து எய்தும் புகழைவிடச் செய்யாமல் எய்தும் புகழே பெரிதினும் பெரிது செய்யும்.

நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள். வளர்பிறையில் கறை எதற்கு? இன உரிமைக்காகக் கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்; நீங்கள் விவேகி என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கலையாளர்
விஜய் சேதுபதிக்கு…

சில நேரங்களில்
செய்து எய்தும் புகழைவிடச்
செய்யாமல் எய்தும் புகழே
பெரிதினும் பெரிது செய்யும்.

நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள்.
வளர்பிறையில் கறை எதற்கு?

இன உரிமைக்காகக்
கலை உரிமையை
விட்டுக் கொடுப்பதே விவேகம்;
நீங்கள் விவேகி.@VijaySethuOffl— வைரமுத்து (@Vairamuthu) October 15, 2020

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More