இந்தியாவின் இறையாண்மையில் அண்டை நாடுகள் தலையிட கூடாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர ஜெய்சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எல்லைப் பகுதியில் பதற்றங்கள் நீடித்து வரும் நிலையில், புளூம்பர்க் பொருளாதார அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியா – சீனாவிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில் சீனா இதுவரை ஒப்புக்கொண்டபடி படைகளை விலக்கிக் கொள்ள மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் லடாக் எல்லையில் சீனா படைகளைக் குவிப்பதால் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில், இருநாட்டு இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் விவரங்கள் இரகசியமானவை என்றும் அதனை வெளியிட இயலாது என்றும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜம்மு – காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் லடாக் எல்லையின் மீது சீனாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சகம் அண்டை நாடுகள் இந்தியாவின் இறையாண்மையில் தலையிடக்கூடாது என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.