புதுச்சேரியில் இன்று (சனிக்கிழமை) மாத்திரம் புதிதாக 222பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்துள்ளதாவது, “புதுச்சேரியில் 4,209 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் புதுச்சேரி- 190பேர், காரைக்கால்- 14பேர், ஏனாம்- 4பேர், மாஹே- 14பேர் என மொத்தம் 222 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் மூவர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 574 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.74 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 32 ஆயிரத்து 978 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 1,410 பேர், காரைக்காலில் 80 பேர், ஏனாமில் 49 பேர், மாஹேவில் 67 பேர் என மொத்தம் 1,606 பேர் வைத்தியசாலையில் சிகிச்சையில் உள்ளனர்.
அதேபோல், புதுச்சேரியில் 2,359 பேர், காரைக்காலில் 332 பேர், ஏனாமில் 27 பேர், மாஹேவில் 96 பேர் என மொத்தம் 2,814 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட 4,420 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 180பேர், காரைக்காலில் 53பேர், ஏனாமில் 19பேர், மாஹேவில் 61 பேர் என 313 பேர் குணமடைந்து, வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 984 (84.86 சதவீதம்) ஆக அதிகரித்தள்ளது.
இதுவரை 2 இலட்சத்து 59 ஆயிரத்து 482 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 94 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என முடிவுகள் வந்துள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.