மருத்துவ கல்வியியல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு விரைந்து நடைமுறைப்படுத்தப்படும் வரை தி.மு.க.வின் போராட்டம் ஓயாது என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு கூடவே கூடாது என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு என்றும் அதை இரத்து செய்ய வேண்டும் என்பதற்காகதான் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கியதாகவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் எதிர்வரும் 6 மாத காலத்தில் அனைத்தும் மாறும் என்றும் இதன்போது நீட் தேர்வு முற்றிலுமாக நீக்கப்படுவதற்குரிய உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்களின் மருத்துவக் கனவு கனிந்து நனவாகும் நலன் பெருக்கும் எனவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.