Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பீகார் சட்டப்பேரவை தேர்தல் | அவுரங்காபாத்தில் வெடிகுண்டுகள் மீட்பு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் | அவுரங்காபாத்தில் வெடிகுண்டுகள் மீட்பு!

1 minutes read

பீகாரில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் அவுரங்காபாத் திப்ரா பகுதியில் வெடிகுண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு சூழலுக்கு மத்தியில் பீகார் சட்டசபை தேர்தல் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. முதல்கட்டமாக 71 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக 30 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் அவுரங்காபாத்தின் திப்ரா பகுதியில் இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த வெடி குண்டுகளை கைப்பற்றிய சி.ஆர்.பி.எப் பொலிஸார் அவற்றை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்துள்ளனர். மேலும் குறித்த பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More