Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கார்கள் அணிவகுத்து நின்றபோதும் மாட்டு வண்டியை தேர்வு செய்த மணமக்கள்.!

கார்கள் அணிவகுத்து நின்றபோதும் மாட்டு வண்டியை தேர்வு செய்த மணமக்கள்.!

1 minutes read
பழமையை போற்றும் விதமாக மாட்டு வண்டியை தேர்வு செய்த மணமக்கள் || newly couple  chose the cow cart

பொள்ளாச்சி அருகே பழமையை போற்றும் விதமாக மாட்டு வண்டியில் மணமக்கள் பயணித்தது, அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே செஞ்சேரியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கும் புனிதா என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, தேவனாம்பாளையம் ஈஸ்வரன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

முதுகலைப்பட்டம் முடித்த மணமக்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

கோயிலிலிருந்து மணமகள் இல்லத்திற்கு புறப்பட்ட போது,  கார்கள் அணிவகுத்து நின்ற போதிலும், பழமையை போற்றும் விதமாக இருவரும் மாட்டு வண்டியில் பயணித்தது, அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது. 

கோயிலில் இருந்து வீட்டிற்கு சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு, கிராமப்புற சாலையில் மாட்டு வண்டியில் பயணித்தனர். இவர்களின் பின்னால், இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் உறவினர்கள் மெல்ல பயணித்து ஊர்வலமாக வந்தனர்.

மண்ணின் மணம் மாறா சிறப்புகளை, அடுத்து வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் விதமாக தாங்கள் மாட்டு வண்டியில் பயணித்ததாக புதுமண தம்பதி மகிழ்வுடன் தெரிவித்தனர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More