அப்பாவிகளின் விடுதலையை சீர்குலைக்குப்பதற்கான தீய முயற்சியே உ.பி. அரசாங்கத்தின் பிரமாணப் பத்திரம் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் முஹம்மது ஷாகிஃப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ள அறிக்கையில்.,
உச்சநீதிமன்றத்தில் பத்திரிகையாளர் சித்தீக் காப்பனின் ஜாமீன் மனுவுக்கு எதிராக உ.பி அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில், உ.பி அரசு அப்பாவிகளை எவ்வாறு சிக்க வைத்து அவர்களை சிறையில் அடைக்க எந்த அளவிற்கு கடின முயற்சியை மேற்கொள்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
சித்தீக் காப்பன் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலக செயலாளராக இருந்தார் என்று அதில் கூறுவது அப்பட்டமான பொய். அவர் பாப்புலர் ஃப்ரண்டின் எந்த அலுவலகத்திலும் செயலாளராக இருந்ததில்லை. இந்த கூற்று உண்மையாக இருந்தாலும் கூட, அது அப்பாவிகளுக்கு எதிரான உ.பி காவல்துறையின் நடவடிக்கையையும், அவர்கள் மீது யு.ஏ.பி.ஏவை சுமத்துவதையும் நியாயப்படுத்தாது. பாப்புலர் ஃப்ரண்ட் அல்லது சட்டப்பூர்வமாக செயல்படும் வேறு எந்த அமைப்பின் அலுவலக செயலாளராக இருப்பதும், பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களுடன் உ.பி.க்கு பயணம் செய்வதும் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவரின் குடும்பத்தினரை சந்திப்பதும் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கான காரணங்கள் அல்ல. இந்த அப்பாவிகளுக்கு எதிராக உ.பி அரசின் அநீதிகளை தொடர அனுமதிப்பது நாட்டை மனித உரிமைகளின் மயானமாக மாற்றி விடும்.
உ.பி அரசின் பொய்களையும், அப்பாவிகள் மற்றும் ஜனநாயக ரீதியான மாற்றுக்கருத்துக்களுக்கு எதிராக உ.பி அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதையும் நீதிமன்றங்கள் புரிந்துகொள்ளும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் நம்புகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.