மதுரை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் தவசி.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையைச் சோ்ந்தவா் திரைப்பட நடிகா் தவசி (60). இவா், கிழக்குச் சீமையிலே படத்தில் துணை நடிகராக அறிமுகமாகி, தற்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து வருகிறாா்.
ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபா் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற இவா், கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளாா். இதற்கான படப்பிடிப்பு கடந்த மாா்ச் மாதம் முடிந்துள்ளது.
இவா், கடந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் காா் விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவச் சிகிச்சைப் பெற்று மீண்டாா். அப்போதுதான் உணவுக்குழாய் புற்று நோய் பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டு, அதற்கும் சிகிச்சைப் பெற்று வந்தாா். இருப்பினும், போதிய பணமின்றி சிகிச்சையைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டாா்.
இந்நிலையில், மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இதனிடையே தனக்கான மருத்துவச் சிகிச்சைக்கும், வறுமையில் வாடும் தனது குடும்பத்தினருக்கும் நிதியுதவி கோரிய விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.
இதையறிந்த திருப்பரங்குன்றம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினா் பா. சரவணன், தனது மருத்துவமனையில் வைத்து நடிகா் தவசிக்கு இலவசமாக சிகிச்சையளிக்கத் தொடங்கினார். இவருக்கு, அங்கம்மாள் என்ற மனைவியும், மகன் பீட்டர்ராஜ், மகள் முத்தரசியும் உள்ளனா்.
இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் திங்கள்கிழமை இரவு காலமானார்.