Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பேரறிவாளனின் பிணைக்காலம் மேலும் நீடிக்கப்பட்டது!

பேரறிவாளனின் பிணைக்காலம் மேலும் நீடிக்கப்பட்டது!

1 minutes read

முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் கொலை வழக்கில்  தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் பிணை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தன்னை விரைந்து விடுதலை செய்யுமாறு கோரி பேரறிவாளன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கின் விசாரணையை ஒத்திவைத்த நீதிபதிகள், பேரறிவாளனின் பிணை காலத்தை மேலும் ஒருவாரத்திற்கு நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அத்துடன் அவர் சிகிச்சைக்கு செல்லும்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதேவேளை பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினர் தொடர்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More