0
மும்பையின் டிராம்பேயில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வந்தவர் விஞ்ஞானி அனுஜ் திரிபாதி.
37 வயதான இவர் கடந்த வியாழக்கிழமை குழந்தைகளின் உணவு தொடர்பாக மனைவியுடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. அப்போது கோவத்துடன் தனது அறையின் உள்ள சென்று பூட்டிக்கொண்டார் அனுஜ்.
பிறகு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து அவர் எழுதி வைத்ததாக குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.