கொரோனா வைரஸுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி விநியோகம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசியையும், ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசியையும் இந்தியாவில் பயன்படுத்த மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான 2 கட்ட ஒத்திகைகளும் நடந்து முடிந்துள்ளன. வரும் 16-ம் திகதி கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பமாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன் அடுத்தகட்டமாக கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.