Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கொரோனா வைரஸ் : ஒரேநாளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கொரோனா வைரஸ் : ஒரேநாளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

0 minutes read

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 17 ஆயிரத்து 15 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 5 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் ஒருகோடியே 1 இலட்சத்து 46 ஆயிரத்து 254 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 2 இலட்சத்து 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொற்றாளர்கள் அதிகமாக குணமடையும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது. மேலும் நேற்று ஒரேநாளில் 201 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 51 ஆயிரத்து 765 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More