இந்தியாவில் இதுவரை 145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட மாநில அரசு வைத்தியசாலைகளின் தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களோடு பயணித்தவர்கள், குடும்ப தொடர்புகள், பிறருடனான தொடர்புகள் என விரிவான தொடர்பு தடமறிதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உருவாகி பரவி வருகிற உருமாறிய கொரோனா வைரஸ் டென்மார்க், நெதர்லாந்து, அவுஸ்ரேலியா, இத்தாலி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பரவி உள்ளமை குறிப்பிடத்தக்கது.