புதுச்சேரியின் பொறுப்பு துணை நிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்கவுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்த கிரண்பேடி அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாக துணை நிலை ஆளுநர் பொறுப்பை கவனிப்பார் என குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அறிவித்திருந்தார்.
குறித்த அறிவிப்பின் படி இன்று புதுச்சேரியின் பொறுப்பு துணை நிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்கவுள்ளார்.
தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வந்த தமிழிசை சௌந்தரராஜன் துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு செல்லும் முன்பு மணக்குள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.