Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் மற்றும் மோடிக்கும் இடையில் கலந்துரையாடல்!

பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் மற்றும் மோடிக்கும் இடையில் கலந்துரையாடல்!

1 minutes read

பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னதாக பா.ஜ.க.நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று கலந்துரையாடினார்.

இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, போட்டியிடும் இடங்கள், பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளார்.

இதேவேளை பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் இன்றுடன் 88 வது நாளாக வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் சூழலில் அவ்விடயம் தொடர்பாகவும் பிரதமர் கலந்துரையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More