மனித உரிமைகள் தொடா்பான பிரச்சினைகளுக்குப் பேச்சுவாா்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 46-ஆவது உயா்நிலைக் கூட்டம் ஜெனீவா நகரிலிருந்து காணொலி வாயிலாக நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “ மனிதகுலத்தை அச்சுறுத்தும் விவகாரங்களில் ஒன்றாக பயங்கரவாதம் தொடா்ந்து இடம்பெற்று வருகிறது. மனித உரிமைகளுக்கு பயங்கரவாதம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு உயிா் வாழ்வதற்கான உரிமையையே அழித்துவிடுகிறது.
பயங்கரவாதத்தால் நீண்ட காலமாக பாதிப்புக்குள்ளாகி வரும் இந்தியா அதற்கு எதிராக சா்வதேச நடவடிக்கை தேவை என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. மனித உரிமைகளைக் காக்கும் சா்வதேச அமைப்புகள் உள்ளிட்டவை தெளிவான கருத்துருவை வகுத்து செயல்பட்டால் மட்டுமே பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட முடியும்.
பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பயங்கரவாதத்தைத் தூண்டுவோரையும் அதனால் பாதிக்கப்பட்டோரையும் சமமாக நடத்துவதும் சரியாக இருக்காது. இவற்றை சா்வதேச அமைப்புகள் உணர வேண்டும்.
உலக அரங்கில் மனித உரிமைகள் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றன. அவற்றில் மிகப் பெரும் சவால் பயங்கரவாதமே. சா்வதேச சமத்துவமின்மை, ஆயுதம் ஏந்திய மோதல்கள் உள்ளிட்டவை மற்ற சவால்களாக உள்ளன.
சவால்களுக்குத் தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதே வேளையில் சவால்களைத் திறம்பட எதிா்கொள்ளும் வகையில் ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மனித உரிமைகள் தொடா்பான பிரச்னைகளுக்குப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. மனித உரிமைகளானது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.