நாடாளுமன்றம், சட்டசபைகளில் மக்களின் வளர்ச்சியை நோக்கியே விவாதங்கள் இருக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
மாநில சட்டசபை உறுப்பினர்கள் மத்தியில் கருத்துரைத்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “அனைத்து அரசியல் சாசன நிறுவனங்களும் அவற்றின் அரசியல் சாசன வரைமுறைக்கு உட்பட்டு ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஜனநாயகம் வலிமை பெறும்.
நாடாளுமன்றம் சட்டசபைகளில் விவாதத்தின் போது கருத்து வேறுபாடு ஏற்படும். ஆனால் முட்டுக்கட்டை ஏற்படும் நிலைக்கு விட்டுவிடக்கூடாது. நாட்டு மக்களின் வளர்ச்சியை நோக்கி மட்டுமே நமது விவாதங்கள் செல்ல வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.