Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் புதிதாக 18,327 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 18,327 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

1 minutes read

இந்தியாவில் புதிதாக 18,327 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,92,088 உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 18,327 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 108 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,57,656 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,08,54,128 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 14,234 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் 1,80,304 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று வரை 1,94,97,704 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More