Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நான்கு இலட்சத்தை நெறுங்குகிறது புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நான்கு இலட்சத்தை நெறுங்குகிறது புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை!

1 minutes read

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் அதி உட்சமாக 3 இலட்சத்து 79 ஆயிரத்து 459 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 83 இலட்சத்து 68 ஆயிரத்து 96 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 50 இலட்சத்து 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 647 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 4 ஆயித்து 812 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தொடர்ச்சியாக 30 இலட்சத்து 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில், சிகிச்சைப் பெறுவோரில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More