Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் கொரோனா வைரஸ்: பிரித்தானியாவில் மேலும் 532 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ்: பிரித்தானியாவில் மேலும் 532 பேர் உயிரிழப்பு

1 minutes read

கடந்த 24 மணி நேரக் காலப்பகுதியில் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 532 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு முன்னர் 194 ஆக பதிவாகியது என அரசாங்க புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இது கடந்த மே மாதம் 12 ஆம் திகதிக்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த எண்ணிக்கை என்றும் இங்கிலாந்தில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேலும் 20 ஆயிரத்து 412 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பிரித்தானியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 இலட்சத்து 33 ஆயிரத்து 775 ஆக உயர்ந்துள்ளது.

அத்தோடு ஜூன் மாதத்திலிருந்து முதல் முறையாக வாரத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் இறப்புகள் 1,000 ஐ தாண்டிவிட்டன என தேசிய புள்ளிவிவர புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More