லண்டன் ஸ்ருதி மனோலயா இசைப்பள்ளி ஸ்ரீ மனோகரன் ரதீஸ்குமாரின் மாணவிகள் செல்வி அபிஷா கருணாகரன், மகிஷா கருணாகரன் ஆகியோரின் வயலின் இசை அரங்கேற்றம், நல்லை ஆதீன குரு முதல்வர் திருமுன்னிலையில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் அண்மையில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன்,கௌரவ அதிதியாக அழகியல் ஓய்வு நிலை உதவி கல்விப்பணிப்பாளர் திருமதி கிருஷ்ணவேணி ,சிறப்பு அதிதிகளாக இந்து கலாசார திணக்கள பணிப்பாளர் திரு அ. உமாமகேஸ்வரன்,லண்டன் வைத்திய கலாநிதி கந்தையா சிவகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இசைதுறை சிரேஷ்ட விரிவுரையாளர் றோபேட் அருட்சேகரன் தலைமை தாங்கிட, திரு ச. நகுலேஸ்வரன் நிகழ்வினை ஒழுங்கமைத்திருந்தார்.
வணக்கம் லண்டன் யாழ் நிரூபர்.