யாழ்.பல்கலைகழக முன்னாள் ஆங்கில விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான அன்ரனிப்பிள்ளை அவர்களின் Daily English with Tamil எனும் நூல் வெளியீட்டு வைபவம் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி மண்டபத்தில் உப அதிபர் அருட்பணி மகன் அலோசியஸ் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கன் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டுவைத்தார். நூலாசிரியர் தான் கற்ற பாடசாலைக்கு ஒரு தொகுதி நூலினை வழங்கி உரையாற்றினார். யாழ் மாநகர முதல்வர் திரு ஆனால்ட், எழுத்தாளர் யோசப்பாலா மற்றும் கல்வியாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.