வட தமிழீழம் , யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேரூந்தின் சாரதி , நடத்தினர் மீது வவுனியா நகரில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா நகரின் பூட்சிட்டிக்கு முன்பாக நேற்று (26.10) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று மாலை பயணித்தினை ஆரம்பித்த குறித்த தனியார் பேரூந்து இரவு 8.10 மணியளவில் வவுனியாவை வந்தடைந்து.
8.20 மணியளவில் நகரின் பூட்சிட்டிக்கு முன்பாக தரிந்து நின்ற சமயத்தில் வாகனத்தில் வருகை தந்த இனந்தெரியாத பர்கள் குறித்த பேரூந்தின் சாரதி , நடத்துனர் மீ து தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.