அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வருகையினை அரசாங்கத்தில் இருக்கும் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கவில்லை என எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த நளின் பண்டார, மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான தளத்தை அமைப்பதற்கு உதவும் உயர்மட்ட விஜயம் குறித்து யாரும் கவலை தெரிவிக்கவில்லை என கூறினார்.
கடந்த காலங்களில், அமைச்சர் உதய கம்மன்பில போன்றவர்கள் அமெரிக்க உயர் அதிகாரிகளின் வருகைக்கு எதிராக போராட்டங்களை நடத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் வருகைகளுக்கு எதிராக தீவிர பிரசாரங்களை மேற்கொண்டவர்கள் தற்போது மௌனம் காத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.