Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோப் குழுவின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!

கோப் குழுவின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!

1 minutes read

கொரோனா வைரஸ் தொற்று காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கோப் எனப்படும் பொது நிறுவனங்கள் குழுவின் நடவடிக்கைகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய கொரோனா சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி கூட்டங்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நெடுஞ்சாலைகள் அமைச்சின் கணக்காளர், நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் அதனுடைய தொடர்புடைய திட்ட முகாமைத்துவப் பிரிவுகளின் அதிகாரிகள் இன்றைய தினம் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், நெடுஞ்சாலைகள் அமைச்சின் கணக்காளர், சம்பந்தப்பட்ட திட்டப்பிரிவின் திட்டப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட 07 அதிகாரிகள் மாத்திரம் இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலம் மத்திய அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான சாத்தியக் கூற்று ஆய்வு மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை குறித்து இங்கு ஆராயப்படவிருப்பதாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More