Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு

கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு

2 minutes read

இன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழைவீழ்ச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கிளிநொச்சி குளத்தின் நீரில் வெள்ள நீர் கலந்து உள்ளமையால் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் போதியளவு நீரை சுத்திகரிக்க முடியாது உள்ளதாகவும் அதனால் இன்றிலிருந்து சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான குடிநீர் வினியோகம் கிளிநொச்சி குளத்தில் தேக்கப்படும் நீரை சுத்திகரித்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு சுத்திகரித்து வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் ில பகுதிகளில் நீர்வெட்டு இன்றிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More