தொடர்ச்சியான மழைவீழ்ச்சி பதிவாகும் நிலையில் உமையாள்புரம் விளாவோடை செல்லும் வீதியின் குறுக்கான வெள்ள நீர் கடந்து வருகின்றது. குறிதத் பாலத்தின் ஊடாக போக்குவரத்து செய்யம் மக்கள் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தள்ளது.
அண்மையில் மேற்கொள்ளபடப்ட அபிவிருத்தி செயற்பாடுகளின்போது வெள்ள நீர் வடிந்தோடக்கூடிய வகையில் முறையான கட்டமைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதற்கு அமைவாக பரவலாக வெள்ள நீர் கடக்காது முறையான நீரோட்டங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டது.
வெள்ள அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடன் அமைக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டம் வெற்றியடைந்துள்ள நிலையில் குறிதத் பாலத்திற்கு மெலாக அதிகளவான நீர் கடந்து செல்வதாக இடர் முகாமைத்தவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அதிளவில் ஊடறுத்து செல்லும் வெள்ள நீரினால் குறித்த வீதியின் கீழ்ப்பகுதி அரிப்பெடுத்துள்ளமையால் அவ்வீதி ஊடாக பயணிப்பது தொடர்பில் அவதானமான செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம், கமநல அபிவிருத்தி திணைக்களம், கண்டாவளை பிரதே செயலகம் ஆகியன இணைந்து படையினரின் உதவியுடன் அப்பகுதியில் ஏற்படும் பாதிப்பினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.