இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 525 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதில் 193பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 94 பேர் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 56 பேர் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் களுத்துறையில் 29 பேரும் கண்டியில் 25 பேரும் காலியில் 22 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் கேகாலை மற்றும் பொலன்னறுவையில் தலா 15 பேருக்கும் இரத்தினபுரியில் 13 பேருக்கும் குருநாகலில் 12 பேருக்கும் புத்தளம் மற்றும் யாழ்ப்பாணத்தில் 9 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை அம்பாறையில் 6 பேருக்கும் அனுராதபுரம், திருகோணமலை, மன்னார் மற்றும் நுவரெலியாவில் தலா 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 305 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 40 ஆயிரத்து 317 பேர் குணமடைந்துள்ளதுடன் 6 ஆயிரத்து 763 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 225 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.