Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூவி இடிப்பு: சுரோன் ராகவனுக்கு தொடர்பா?

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூவி இடிப்பு: சுரோன் ராகவனுக்கு தொடர்பா?

1 minutes read

தமிழர்கள் தனித்தவமாக தமது அடையாளங்களுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதற்கு மிகப்பெரிய ஒரு உதாரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் உடைக்கப்பட்ட சம்பவம் அமைந்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசாங்கத்தின் கட்டளைக்கு அமைவாக இராணுவத்தின் உதவியுடன் பல்கலைக்கழக துணைவேந்தரின் ஆலோசனைக்கு அமைவாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடிக்கப்பட்டுள்ளது.

அரச திணைக்கலமாக இருக்கலாம், அரச நிறுவனங்களின் பணிப்பாளர்களாக இருக்கலாம். இவர்கள் எல்லாம் அரசாங்கத்தின் ஒரு முகவர்களாக இருக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற நிகழ்வு என்பது ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நிகழ்வாக இதனை நாங்கள் பார்க்கின்றோம்.

தமிழர்கள் தனித்தவமாக தமது அடையாளங்களுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதற்கு மிகப்பெரிய ஒரு உதாரணமாக குறித்த சம்பவத்தை பார்க்க முடியும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது இலங்கையில் தமிழர்கள் மிகக் கொடூரமான முறையில் இனப் படுகொலையால் 2009 ஆம் ஆண்டு இடம் பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள் ஆகியோரை நினைவு கூறுவதற்கான ஒரு நினைவிடத்தையே இலங்கை அரசு இடித்துள்ளது.

உண்மையில் இதன் பிண்ணனியில் பல்வேறு விடயங்கள் உள்ளதாக நான் சந்தேகப்படுகின்றேன். என்னிடம் சிலர் ஆலோசனைகளையும் வழங்கி உள்ளனர்.

குறிப்பாக கடந்த நாடாளுமன்றத்தில் முன்னாள் வடக்கு ஆளுநரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடர்பில் பேசியிருந்தார்.

ஆகவே, என்னைப் பொருத்த வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவிடம் உடைக்கப் பட்டமைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் பேசியதற்கும் இடையில் நேரடி தொடர்புகள் உள்ளதாகவே நான் கருதுகின்றேன்.

அவர் பேசிய ஒரு வார காலத்தினுள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் உடைக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More