கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துல்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 82 வயதான பெண்ணொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொற்று உறுதியானதை அடுத்து, ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மரணித்தாக தெரிவிக்கப்படுக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றுடன் அதிகரித்த மாரடைப்பே அவரின் மரணத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 256ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் மேலும் 715 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொரோனா கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், இலங்கையில் அடையாளங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 44 ஆயிரத்து 746 பேர் பூரணமாக குணமடைந்துள்ள நிலையில், 7 ஆயிரத்து 311 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேநேரம், கொரோனா தொற்று சந்தேகத்தில் 641 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.