Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்தால் அது தொழிலாளர்களுக்கே பாதிப்பாக அமையும்!

கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்தால் அது தொழிலாளர்களுக்கே பாதிப்பாக அமையும்!

1 minutes read

கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்தால் அது தொழிலாளர்களுக்கே பாதிப்பாக அமையும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கம்பனிகளும், தொழிற்சங்கங்களும்தான் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றன. அரசாங்கத்தால் மூன்றாம் தரப்பாக தலையிடவே முடியும். அந்தவகையில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கின்றோம்.

கூட்டு ஒப்பந்தம் அநீதியானது என குறிப்பிட்டு தொழிலாளர்களை சிலர் தூண்டிவிடுகின்றனர். கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு நன்மைகளும் உள்ளன.

குறிப்பாக வருடம் 300 நாட்கள் வேலை வழங்கப்படவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்படாவிட்டால் கம்பனிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால் கூட்டு ஒப்பந்தம் இல்லையேல், தொழில் அமைச்சரிடம்தான் முறையிடவேண்டிவரும். கம்பனிகள் நினைத்தால் 2 நாட்கள்கூட வேலை வழங்கலாம். அவர்களின் முடிவை சவாலுக்குட்படுத்த முடியாது.

கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்வதற்கு நாமும் தயார். ஆனால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு, கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களே பொறுப்பு கூறவேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More