Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் 11 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் 11 கொரோனா மரணங்கள் பதிவு

1 minutes read

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு 5 பெண்களுகம் 6 ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

இறுதியாக பதிவான மரணங்கள், 

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதுடைய பெண்ணொருவரும் தெஹியத்தகண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண்யொருவரும் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய பெண்ணொருவரும், களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய பெண்ணொருவரும், வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஆண்ணொருவரும், திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண்ணொருவரும் பெபிலியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதுடைய ஆண்ணொருவரும் அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பெண்ணொருவரும் கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 94 வயதுடைய ஆண்ணொருவரும் பரகஸ்தொட பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண்ணொருவரும் களனி பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவரும் இவ்வாறு இறுதியாக கொவிட் 19 தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை 1636 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 

அதற்கமைய நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 108 120 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 95 975 பேர் குணமடைந்துள்ள போதிலும் , 10 764 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More