நாட்டிலுள்ள ஹோட்டல்களில் இரவு நேரங்களில் ஒன்றுகூடல்கள் கட்டுப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய ஹோட்டல்களில் இரவு நேர கேளிக்கை நிகழ்வுகள், விடுதிகள், ஒன்றுகூடல்கள், நைட் கிளப் ஆகியவற்றின் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் இரு வாரங்களுக்கு ஹோட்டல்களில் இரவு 10 மணிக்கு பின்னர் இரவு நேர கேளிக்கை நிகழ்வுகள், விடுதிகள், ஒன்றுகூடல்கள், நைட் கிளப் ஆகியவற்றின் செயற்பாடுகளுக்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.