கோப்பு படம்.
மட்டக்களப்பு செங்கலடி செல்லம் திரையரங்கு உரிமையாளரும் , தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவருமான கணபதிப்பிள்ளை மோகன் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கலடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவரது முகநூலில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பிலான ஒளிப்படங்கள் , காணொளிகள் என்பவற்றை வெளிநாட்டில் இருக்கும் சில நபர்கள் டக் (tag) செய்திருந்தமை தொடர்பில் விசாரணை செய்யவே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
தற்போது அவர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.