Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை செங்கலடி திரையரங்க உரிமையாளர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது!

செங்கலடி திரையரங்க உரிமையாளர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது!

1 minutes read

கோப்பு படம். 

மட்டக்களப்பு செங்கலடி செல்லம் திரையரங்கு உரிமையாளரும் , தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவருமான கணபதிப்பிள்ளை மோகன் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  

செங்கலடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அவரது முகநூலில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பிலான  ஒளிப்படங்கள் , காணொளிகள் என்பவற்றை வெளிநாட்டில் இருக்கும் சில நபர்கள் டக் (tag) செய்திருந்தமை தொடர்பில் விசாரணை செய்யவே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. 

தற்போது அவர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு  வருகின்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More