ஐக்கிய இராஜ்யத்தில் வசிக்கின்ற இலங்கை மருத்துவர்கள் ( தமிழ் சிங்கள , முஸ்லீம் ) ஒன்றாக இணைந்து கடந்த வாரம் 1000 pulse oximeter இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இது கொரோணாவால் பாதிக்கப்பட்டு மூச்சுதிணறல் ஏற்படும் பட்சத்தில் அவர்களின் ஓட்சிசன் அளவை கண்டறிந்து அதன் பின்னர் அதற்கான மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்காக உதவும் கருவி ஆகும்.
நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவை முன்னுரிமை அடிப்படையில் அங்குள்ள வைத்திய சங்கத்தால் பிரித்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் புலம்பெயர் தமிழ் மருத்துவ தொண்டு நிறுவனங்களான MIOT ( Medical Institute of Tamils ) மற்றும் JMFOA -UK, Australia, Canada and USA என்பனவும் தாயகமக்களுக்கு தேவையான கொரோனா அவசர மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பு செய்யும் பணிகளை ஆரம்பித்து உள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.