Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கெளதாரிமுனை கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு..!

கெளதாரிமுனை கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு..!

1 minutes read

பூநகரி கௌதாரிமுனை கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று(18)  பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து நண்பர்களோடு நேற்று ஞாயிற்றுக்கிழமை கெளதாரிமுனைக்கு  சுற்றுலா சென்ற இளைஞர்கள் அங்குள்ள கடலில் நீராடியுள்ளனர். இதன் போதே, குறித்த இளைஞர் கடலில் மூழ்கியுள்ளார்.

 கடலில் மூழ்கிய இளைஞனை நண்பர்கள் ஆபத்தான நிலையில் மீட்டு பூநகரி வைத்தியசாலைக்கு கொண்ட சென்ற போது வழியில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மீசாலையைச் சேர்ந்த 30 வயதான தபாலக உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More