கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் இருந்த ஆட்லறி செல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியிலேயே இவ்வாறு வெடிக்காத வெடிபொருள் மீட்கப்பட்டது.
மாவட்ட செயலகத்தினால், வன்னி விழிப்புலனற்றோருக்கான தலைமை அலுவலகம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட காணியிலேயே இவ்வாறு வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
துப்புரவுப் பணியில் ஈடுபட்டவர்கள் வெடிக்காத நிலையில் காணப்பட்ட வெடிபொருள் தொடர்பில் இராணுவத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினர் குறித்த ஆட்லறி செல்லை மீட்டு செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சியிலிருந்து வணக்கம் லண்டன் நிரூபர்