சூரியவெவ பகுதயில் மோட்டார் சைக்களில் பயணித்த இருவர் பொலிஸாருடன் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்களில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் பொலிஸார் சந்தேக நபர்கள் சிலரை கைதுசெய்வதற்கு குறித்த பகுதிக்கு சென்றிருந்தபோது இந்த பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர்கள் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.
அதனால் காயமடைந்த பொலிஸார் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.