Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்தவிற்கு வீடொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

பராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்தவிற்கு வீடொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

1 minutes read

டோக்கியோவில் நடைபெற்ற 2020 பராலிம்பிக்கில், ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி, இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக் கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு புதிய வீடொன்றை பெற்றுக் கொடுக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேராவிற்கு இவ்விடயம் தொடர்பாக பிரதமர் கலந்துரையாடியுள்ளார்.

அதாவது, நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் செயற்படுத்தப்படும் வீடமைப்பு திட்டத்திலிருந்து குறித்த வீட்டை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் பிரதமரின் பணிப்புரைக்கமைய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் உதய நாணயக்காரவுக்கு இந்த விடயம் தொடர்பாக அறிவுறுத்தியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More