செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஐ.நா. 76ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டா பங்கேற்பு!

ஐ.நா. 76ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டா பங்கேற்பு!

0 minutes read

எதிர்வரும் 21 ஆம் இல் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதியின் முதல் உரை இது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி, பொருளாதாரம், கல்வி மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் குறித்து பல துறைசார் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு தனது கொள்கைக்கு ஏற்ப குறைந்த எண்ணிக்கையிலான பிரதிநிதிகளுடன் இந்த விஜயத்தை மேற்கொள்ள ஜனாதிபதி முடிவு செய்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More