Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஐ.நா. ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு!

ஐ.நா. ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு!

1 minutes read

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பிலான வாய்மூல முன்னேற்ற அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இலங்கை அரசாங்கம் மனித உரிமை பேரவையோடு இணங்கிச் செயற்படும் என ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியை செயலில் காண வேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளதை கவனத்தில் கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட், தனது வாய்மூல முன்னேற்ற அறிக்கையூடாக வெளிப்படுத்தியுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் அண்மையில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தையும் சட்ட ஆட்சிக்கு முரணான விடயங்களையும் சுட்டிக்காட்டியதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி சம்பந்தமான திடமான நிலைப்பாடு குறித்தும் எம்.எ.சுமந்திரன் நன்றி தெரிவித்தார்.

அதேபோல், சாட்சியங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தலுக்கான பொறிமுறை ஏற்படுத்துவது சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் விரைவில் நிறைவுறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More