Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பில் இதுவரையில் 2850 கொரோனா சடலங்கள் அடக்கம்!

மட்டக்களப்பில் இதுவரையில் 2850 கொரோனா சடலங்கள் அடக்கம்!

1 minutes read

இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஓட்டுமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அடையாளப்படுத்தப்பட்ட ஒரே ஒரு இடம் ஓட்டுமாவடி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதியான மஜீமா நகர் சூடுபத்தினசேனை. இந்த பொது மயானத்திலே சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுவருகின்றன.

இதனை எமது சபை பொறுப்பேற்று மனிதவலு இயந்திரவலு என்பவற்றை பயன்படுத்தி மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்கு இராணுவத்தினர்,சுகாதார பணியாளர்கள் ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றனர்.

இது வரையில் 2850 சடலங்கள்அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது கிழக்கு மாகாணத்தில் இருந்து நாளாந்தம் அதிகமான சடலங்கள் வருகின்றது” என அவர் தெரிவித்தார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More