இவர்களில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் 60 வயதுக்கு குறைவான 14 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 56 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 680 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 609ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 4 இலட்சத்து 54 ஆயிரத்து 532 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 46 ஆயிரத்து 397 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.