Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லையிலும் ஆர்ப்பாட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லையிலும் ஆர்ப்பாட்டம்!

1 minutes read

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர், 1669ஆவது நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சர்வதேச சிறுவர் நாளான இன்றும், கொரோனா சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு- மாங்குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் முன்பாக இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சர்வதேச விசாரணையே எமக்கான தீர்வு, எங்கே எங்கே உறவுகள் எங்கே? , இலங்கை இராணுவத்திடம் கையளித்த எமது சிறுவர்கள் எங்கே?, எமது குழுந்தைகளுக்கு உயிர்வாழும் உரிமை இல்லையா?, எங்கள் குழந்தைகள் எமக்கு வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More