Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜப்பான் கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் வரவேற்பு!

ஜப்பான் கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் வரவேற்பு!

1 minutes read

கொழும்பு துறைமுகத்தை நேற்று (சனிக்கிழமை) வந்தடைந்த ஜப்பான் தற்பாதுகாப்பு சமுத்திர படையணி கப்பல்களை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

MURASAME, KAGA மற்றும் FUYUZUKI ஆகிய மூன்று பாரிய கப்பல்களே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

கப்பல்களின் வருகை தொடர்பாக என ஜப்பானிய தூதரகம் தெரிவிக்கையில் ,இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இது சிறந்த சந்தர்ப்பம் என்று குறிப்பிட்டுள்ளது.

220 கப்பல் பணியாளர்களுடன் வருகை தந்துள்ள 151 மீட்டர் நீளம் கொண்ட FUYUZUKI கப்பல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டில் இருந்து செல்லவுள்ளது.

பசுபிக் வலயத்தின் ஏனைய நாடுகளுடன் இருதரப்பு பயிற்சியில் ஈடுபட்டதை அடுத்து, அவுஸ்திரேலியாவில் இருந்து MURASAME மற்றும் KAGA ஆகிய போர்க்கப்பல்களும் நாட்டை வந்தடைந்தன.

இந்த கப்பல்கள் ‘JA- LAN EX’ எனப்படும் இலங்கை கடற்படையுடன் இணைந்த கடற்படை பயிற்சியில் ஈடுபடவுள்ளன. இந்த இரண்டு கப்பல்களும் நாளை செல்லவுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More