Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விரைவில் நீக்கப்படும்!

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விரைவில் நீக்கப்படும்!

1 minutes read

மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 21ஆம் திகதி வரை தற்போது மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை அமுலில் உள்ளது.

இந்தநிலையில், பயணத்தடையை மேலும் நீட்டிப்பது குறித்து கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான செயலணி தீர்மானிக்கும்.

எனினும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம், மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடையை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனினும் எப்போது தடை நீக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் குறிப்பிடவில்லை.

எவ்வாறிருப்பினும் நாட்டைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More